Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கனரா வங்கி சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2023’அக்.30 முதல் நவ.5 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கனரா வங்கி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
"ஊழலை எதிர்போம் நாட்டு நலனில் பொறுப்புடன் இருப்போம்" என்னும் வாசகத்தை மையக் கருத்தாகக் கொண்டு நடைபெற்ற ஊர்வலத்தில் எச்.மோகன், உதவி பொது மேலாளர், சேலம் ஊரக ஆர்.ஓ., நாமக்கல் மாவட்டம் மற்றும் பிரிவு மேலாளர்கள் ஜெயக்குமார், ராஜேந்தர் ரெட்டி, சுனில், கண்ணன், கவிதா, தட்சிணாமூர்த்தி , ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.